Wednesday, April 23, 2025

அகத்தியப்பெருமானின் விளக்கம்!









கேள்வி: சமீபகாலத்தில், வாமாசாரத்தின் பூஜைகள், சக்தி, ஏவல் போன்றவை நிறையவே தலை தூக்கி வருவதாக தெரிகிறது. அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு எடுத்துக் கொள்ள ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்?

1. 108 மூலிகைகளை நல் முறைகளாக ஹோமத்தில் இட்டு, பரிபூரணமாக எரிய வைத்து, அது நன்றாக பஸ்பமாகிய பிறகு, அதனுடன், மஞ்சள், குங்குமம், விபூதி பிரசாதங்களை சேர்த்து, குலதெய்வக் கோவிலிலிருந்து சிறிதளவு மண்ணை எடுத்து, நன் முறையாகவே பச்சை கற்பூரத்தை அதில் இட்டு, ஒரு துணியில் கட்டி, அனுதினமும் குலதெய்வத்தை நினைத்து பூஜைகள் செய்து வர, அதனுடன் மண் தட்டில் பசும் சாணியில் உருவான விபூதியில், ருத்திராக்ஷத்தை வைத்து, அதன் அருகே, இப்பொழுது சொன்னேனே அந்த மூட்டையை வைத்துவிட்டு அனுதினமும் பூஜைகள் செய்து வந்தாலே போதுமானதப்பா. அதாவது தூப, தீபம் காட்டி வந்தாலே போதுமானது அப்பா. மிகுந்த பலமாக மந்திர ஜபம் செய்து வந்தால், எவன் அதை செய்தானோ அவனை சென்று பலமாக தாக்கும், அவன் குடும்பத்தையே அழித்துவிடுமப்பா. ஆனால், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என சித்தர்கள் விரும்புவதால், அப்படிப்பட்ட மனிதர்களுக்கு நிறையவே வாய்ப்பை கொடுக்கிறோம். 

2. அனுதினமும் சுதர்சன மந்திரத்தை 108 முறை உருவேற்றி, முன்னர் கூறிய 108 மூலிகை பஸ்மத்தை நெய் விட்டு குழைத்து உச்சந்தலையில் வைத்துக் கொண்டு சென்றால் எதுவும் அண்டாதப்பா.

No comments:

Post a Comment

அகத்தியப்பெருமானின் விளக்கம்!

கேள்வி: சமீபகாலத்தில், வாமாசாரத்தின் பூஜைகள், சக்தி, ஏவல் போன்றவை நிறையவே தலை தூக்கி வருவதாக தெரிகிறது. அதன் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு எடு...